எழுதிய ‘ ந’ வின் நுனியில்
ஒரு அலகினைச் செருகினாள்
பக்கவாட்டு நெளிவுகளில்
சில சிறகுகளை பொதிந்துவிட்டு
சுழியின் கீழே வாலிலிழுத்தாள்
கொண்டுவந்த கடுகினை
மையத்தில் ஒட்டி முடித்தபொழுது
ஒருமுறை உடல் சிலும்பி
ந பறக்கிறது
பிறகான எனது ந விலெல்லாம்
ஒரு காகம் கரைகிறது
- பா.திருச்செந்தாழை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment